தமிழ்நாடு
கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!
![Jeeyar - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Jeeyar.jpg)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் அத்தி வரதர் கனவில் வந்து அழுததாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியுள்ளார்.
அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். கூட்ட நெரிசலால் இதுவரை 8 பேர் உரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிலர் விவிஐபி பாஸ் மூலம் மிகவும் வசதியாக வந்து பார்த்து செல்கின்றனர். இது பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, இதே அத்திவரத பெருமாள் ஸ்ரீகிருஷ்ணபிரேமி அன்னா சுவாமிகளிடம் உற்சவம் ஆரம்பித்த புதிதில் மறுபடியும் என்னைச் சேற்றில் புதைக்கப் போகிறாயா? என்னைப் புதைக்க வேண்டாம் என்று அவருடைய கனவில் தோன்றி அழுததாக கிருஷ்ணபிரேமி அன்னா கண்ணீருடன் கூறினார் என்னிடம்.
இதை நாங்கள் தமிழக முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் அறநிலையத்துறை அமைச்சரிடமும் மற்றும் அனைத்து அமைச்சர்களிடமும் நமது நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக ஸ்ரீகிருஷ்ணபிரேமி அன்னா அவர்களின் முடிவைக் கூறியுள்ளோம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.