Connect with us

கிரிக்கெட்

நியூசிலாந்தை தோற்கடித்த ஐசிசியின் விதி: அது விதியல்ல சதி என சாடும் முன்னாள் வீரர்கள்!

Published

on

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று உலகக் கோப்பையை முதன் முறையாக கைப்பற்றியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோற்கவும் இல்லை, இங்கிலாந்து அணி வெற்றி பெறவும் இல்லை. ஆனால் கோப்பையை மட்டும் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இதற்கு காரணமான ஐசிசியின் சர்ச்சைக்குறிய விதியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முதலில் நடந்த ஐம்பது ஓவர் போட்டி சமனில் முடிய, வெற்றி தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க எந்த அணி அதிக பவுண்டரிகளை அடித்ததோ அந்த அணிக்கு வெற்றி அறிவிக்கப்படும் என்ற சூப்பர் ஓவர் விதி நியூசிலாந்து அணியின் வெற்றியை பறித்து, கோப்பையை இங்கிலாந்துக்கு கொடுத்துவிட்டது.

இந்நிலையில் சூப்பர் ஓவர் விதிமுறையானது அதிரடி பேட்டிங்குக்குச் சாதகமாக வகுக்கப்பட்டது ஏன்? என சர்ச்சையை கிளப்பியுள்ளது. பந்துவீச்சில் அதிக விக்கெட்டை வீழ்த்திய அணிக்கு வெற்றியை வழங்கியிருக்கலாமே? நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. ஆனால் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப், தீடீர் மரணம் ஏற்படுவது போல, சூப்பர் ஓவரின் இந்த பவுண்டரி விதிமுறையை ஜீரணிக்கவே முடியவில்லை. இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தி கூட வெற்றியைத் தீர்மானித்திருக்கலாம். வெற்றி ஒருவருக்குத்தான் என்பதை ஏற்கிறேன், ஆனால் பவுண்டரியை வைத்து வெற்றி நிர்ணயிக்கப்பட்டதற்குப் பதிலாக கோப்பையை இருவருக்கும் பகிர்ந்தளித்திருக்கலாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர், உலகக் கோப்பையை வெல்வது அதிக பவுண்டரிகளை அடித்த அணிதான் என்ற இந்த முடிவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது கேலிக்குரிய விதியாகும். என்னைப் பொறுத்தவரையில் இருவரும் வெற்றியாளர்கள்தான் என கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு வாழ்த்துகள்! நியூசிலாந்துக்கு வருத்தங்கள்! இந்த விதிமுறை மிக பயங்கரமாக உள்ளது. இதை மாற்ற வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரட் லீ தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். அதேப்போல நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃபிளமிங், இது ஒரு கொடூரமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!