Connect with us

கிரிக்கெட்

செம்ம மேட்ச்: சூப்பர் ஓவர் வரை சென்று உலகக் கோப்பையை முகர்ந்தது இங்கிலாந்து!

Published

on

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணியை போல ரன் குவிக்க தடுமாறியது. ஆனால் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டது. ஆனால் ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்த பின்னர் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. இருந்தாலும் கடைசி வரை பென் ஸ்டோக்ஸ் வெற்றிக்காக போராடினார். கடைசி பந்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட பென் ஸ்டோக்ஸால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.

உலகக் கோப்பை போட்டியில் ஆட்டம் சமனில் முடிந்தது மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை நடத்தப்பட்டது. சூப்பர் ஓவருல் இங்கிலாந்து சார்பில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் பந்துவீசினார். அந்த ஓவரில் 15 ரன்கள் அடிக்கப்பட்டது. பின்னர் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தின் ஜிம்மி நீஷமும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து சார்பில் பந்துவீசினார்.

முதல் ஐந்து பந்துகளில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் அடிக்க மீண்டும் 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பவுண்டரிகளின் எண்ணிக்கையை வைத்து இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. பென் ஸ்டோக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருதும், கேன் வில்லியம்சனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

author avatar
seithichurul
சினிமா54 நிமிடங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்1 மணி நேரம் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!