சினிமா செய்திகள்
படு வேகமாக படமாக்கப்படும் மாஃபியா!
லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் மாஃபியா. இந்த படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் படு பிசியாக செல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தடம் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் விரைவில் பாக்ஸர் படம் வெளியாகவுள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் மாஃபியா திரைப்படமும் வெளிவர இருக்கிறது.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு ஜீப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அருண் விஜய் படத்தின் ஷூட்டிங் படு பிசியாக செல்கிறது என பதிவிட்டுள்ளார்.
மிகவும் குறைந்த நாட்களில் படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டவர் கார்த்திக் நரேன் என்பதால், மிக விரைவாக இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.