கிரிக்கெட்
ஓய்வுக்கு பின்னர் தோனி நியூசிலாந்து அணிக்காக விளையாடுவாரா?
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு. இவர் இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பு அசாத்தியமானது. இந்நிலையில் 38 வயதான தோனியின் ஓய்வு குறித்து சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தோனி தனது ஓய்வுக்கு பின்னர் நியூசிலாந்து அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் பதிலளித்துள்ளார்.
கடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெளியேறியபோதே தோனியின் ஓய்வு குறித்த பேச்சு ஆரம்பித்தது. இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதியிலும் சிறப்பாக விளையாடினார் தோனி. மிக மோசமாக தோற்க வேண்டிய இந்திய அணியை வெற்றியின் விளிம்புக்கு கொண்டு வந்து கௌரவமாக தோற்றதற்கு தோனி முக்கிய காரணம்.
அனைத்து வகையான உலகக் கோப்பையையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான். இந்த உலகக் கோப்பை போட்டிதான் தோனிக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். இந்நிலையில் தற்போது உலகக் கோப்பை போட்டியில் இந்து இந்தியா வெளியேறியுள்ள நிலையில் தோனியின் ஓய்வு குறித்த பேச்சு மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனிடம், தோனிக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டால் அவரை நியூசிலாந்து அணியில் சேர்த்துக்கொள்வீர்களா என கிண்டலாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தோனி உலகளவில் மிகச் சிறந்த வீரர். ஆனால், அவர் இந்தியர் அல்லவா? நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் அவருக்கு கட்டாயம் இடம் அளிப்பேன். அவரது அனுபவம் அவரது பங்களிப்பு இப்போதும் எதிர்காலத்திலும் அவசியமானது என்றார்.