Connect with us

கிரிக்கெட்

தோனி விஷயத்தில் நடந்தது மிகப்பெரிய தவறு: சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ஆவேசம்!

Published

on

நேற்று நடந்து முடிந்த இந்தியா, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றதின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ஆராயப்பட்டு அவை விமர்சிக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக தோனியை பின்வரிசையில் களமிறக்கியது. இந்தியாவின் முன்வரிசை விக்கெட்டுகள் குறிப்பாக முதல் மூன்று விக்கெட்டுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிட்டது. இது தான் இந்திய அணிக்கு முதல் எதிரியாக மாறியது. ஆனால் விக்கெட் இழப்பு தொடர்வதை தடுக்க தோனியை முன்னரே களமிறக்காதது ஏன் என தற்போது கேள்வி எழும்பியுள்ளது.

தோனியை முன்னரே அதாவது, ரிஷப் பண்ட் களமிறங்குவதற்கு முன்னரே களமிறக்கியிருந்தால் அவர் மற்ற வீரர்களை சிறப்பாக கையாண்டு விளையாட வைத்திருப்பார் அணியையும் சுலபமாக வெற்றிபெற வைத்திருப்பா என முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது தொடர்பாக சச்சின் கூறியது, இக்கட்டான சூழலில் தோனியை முன்கூட்டியே களமிறக்கியிருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவிற்கு முன்பாக தோனி வந்திருக்க வேண்டும். அதேபோல தினேஷ் கார்த்திக் 5-வது இடத்தில் இறங்கியது என்னை பொருத்தவரை சரியான முடிவு இல்லை என்றார்.

விவிஎஸ் லக்ஷ்மன் கூறியபோது, ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் முன்பே தோனி களமிறங்கியிருக்க வேண்டும். 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோனி நான்காவதாக களமிறங்கி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதேபோல நேற்றும் அவர் முன்பே களமிறங்கியிருக்க வேண்டும் என்றார்.

முன்னாள் கேப்டன் கங்குலி கூறியபோது, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக தோனி இறங்கியிருந்தால், அவர் ரிஷப் பந்த்திற்கு சரியான ஆலோசனை கூறி நிதானமாக ஆட வைத்திருப்பார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்கவும் வலியுறுத்தியிருப்பார். இதன் மூலம் தோனி விக்கெட் சரிவையும் தடுத்திருப்பார். அத்துடன் தோனி தனது அனுபவத்தை பயன்படுத்தி நிலைமையை அறிந்து விளையாடி இருப்பார். எனவே தோனியை ஏழாவது இடத்தில் களமிறக்கியது மிகப் பெரிய தவறு என தெரிவித்தார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!