உலகம்
நீங்க ஃபேஸ்புக் யூஸ் பன்றீங்களா? அய்யயோ தப்பு பன்னிட்டீங்களே!
இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்ற சமூக வலைதளமாக உள்ளது ஃபேஸ்புக். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் ஃபேஸ்புக்கின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த ஃபேஸ்புக் நிறுவனத்தில் பயனாளர்களின் தகவல் கசிந்ததாக கடந்த ஆண்டு பெரிய சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் தனியுரிமை கொள்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போது ஃபேஸ்புக்கிற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக். இவர் தனது ஃபேஸ்புக் கணக்கையும் டெலிட் செய்துவிட்டு அனைவரையும் அவ்வாறு செய்ய வலியுறுத்தினார்.
இந்நிலையில் ஓராண்டு இடைவெளிக்கு பின்னர் இந்த சர்ச்சையை மீண்டும் கையிலெடுத்துள்ளார் இவர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ் வோஸ்னியாக், உங்களது உரையாடல்கள் தனிப்பட்ட முறையில்தான் நடக்கிறது என நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால், அதை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. இதையெல்லாம் தடுக்க எந்த வழியும் இல்லை.
லேசரை பயன்படுத்தி உங்களது இதயத் துடிப்புகளை அளவிடுகின்றனர். பல கருவிகளைப் பயன்படுத்தி உங்களை ஒட்டுக்கேட்கின்றனர். எனது செல்போன் மூலம் என்னை ஒட்டுக்கேட்கிறதா, இல்லையா என்பது யாருக்குத் தெரியும்? இதில் அலெக்ஸா நிறுவனம் ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியது. ஃபேஸ்புக்கை விட்டு நிரந்தரமாக வெளியேறுவது தான் இதற்கு தீர்வு. சிலர் ஃபேஸ்புக்கின் பயன்களுக்காகத் தனியுரிமையை விட்டுக்கொடுக்கின்றனர். ஆனால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேற ஒரு வழியைக் கண்டறியுங்கள் என்றார்.