Connect with us

தமிழ்நாடு

முகிலன் மனைவி பரபரப்பு பேட்டி: அவருக்கு நடந்த பயங்கர சித்ரவதைகள்!

Published

on

கடந்த 5 மாதங்களாக காணாமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் அதன் பின்னர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றவர் அதன் பின்னர் மாயமாகிவிட்டார்.

இதனையடுத்து முகிலனுக்கு என்ன ஆனது, எங்கு இருக்கிறார்? உயிரோடுதான் இருக்கிறாரா என பல சந்தேகங்களுடன் தமிழகத்தில் முகிலனுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தவாறே இருந்தன. இந்நிலையில் அவரை ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து முகிலனிடம் ஆட்கொணர்வு மனு தொடர்பாக விசாரித்த சிபிசிஐடி போலீசார், அவரை கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்துள்ளனர். கரூர், குளித்தலையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் முகிலனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது மனைவி பூங்கொடி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

வரும் 10ஆம் தேதி அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளாமல் தடுக்கவே திட்டமிட்டு எனது கணவரை கைது செய்துள்ளனர். அவரை கடத்திச் சென்று சித்ரவதைகள் செய்து கொண்டுவந்து விட்டுவிட்டதாகச் சொல்கிறார். இவ்வளவு நாட்களாக எங்கு வைத்திருந்தனர் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. ஓர் இடத்தில் அடைத்து வைத்து பயங்கர மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். அடைத்து வைத்திருந்தவர்களே திருப்பதி ரயில் நிலையத்தில் விட்டுவிட்டிருக்கிறார்கள்.

ஐசியுவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு முகிலனின் உடல்நிலை உள்ளது. அவருக்குச் சரியாக சாப்பாடு கூட போடவில்லை. 30 நாட்களாவது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றால்தான் பழைய நிலைக்குத் திரும்புவார். இதனையடுத்து முகிலனை கடத்தியதாக அவர் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

முகிலன் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் முன்பிருந்தபோது நடந்த போராட்டங்கள் குறித்து மட்டும்தான் பேசுகிறார். அவர் தெளிவான மனநிலையிலேயே இல்லை. என்னிடம் கூட அவர் சரியாகப் பேசவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் முகிலனின் மனைவி பூங்கொடி.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!