Connect with us

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ பரபரப்பு கடிதம்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணி அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியின் வீரர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பிசிசிஐ, ஐசிசிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியுடன் மோதியது. இந்த போட்டியின் போது மைதானத்துக்கு மேலே விமானத்தில், காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனர் பறக்கவிடப்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் வலம் வந்த அதே விமானம், இனப்படுகொலையை இந்தியா நிறுத்துக, காஷ்மீரை சுதந்திரமாக்கு என்ற வாசகம் அடங்கிய பேனரை பறக்கவிட்டது.

அத்தோடு நின்றுவிடாமல் மூன்றாவது முறையாக போட்டி நடந்துகொண்டிருக்கும் போது வலம் வந்த அந்த விமானம், இனப்படுகொலைக்கு உதவுவதை தவிர்க்கவும் என்ற வாசகத்தை பறக்கவிட்டது. இதனால் மைதானத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கத்துக்கு, இந்திய கிரிக்கெட் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், இதுபோன்ற சம்பவங்களால் இந்திய வீரர்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். இனிவரும் போட்டிகளுக்கு இந்திய வீரர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இனிவர உள்ள போட்டிகளில் மைதானங்களுக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் என தகவல்கள் வருகின்றன.

வணிகம்1 மணி நேரம் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா12 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா13 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!