தமிழ்நாடு
எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே: வைகோவை சீண்டும் நடிகை கஸ்தூரி!
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என நேற்று தீர்ப்பிடப்பட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இதனால் அவரால் மாநிலங்களவை எம்பி ஆக முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் வைகோவை கிண்டலடிக்கும் விதமாகவும், சீண்டும் விதமாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, எண்ணையை தடவிக்கிட்டு மனல்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் – பழமொழி. எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். – புதுமொழி. டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம்! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே! என வைகோவை விமர்சித்துள்ளார்.