தமிழ்நாடு
பாஜக தொண்டர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள்: இந்தி திணிப்புக்காக பாடுபடும் எச்.ராஜா!
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கும் நிலையில் இந்தியை எதிர்ப்பதா என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இந்திக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் திரும்பவும் கொண்டுவரப்படுகிறது என கூறிவருகிறது சில கட்சிகள். ஏனெனில் இது ருசி கண்ட பூனை, ரத்த சுவை பார்த்த புலி சும்மா இருக்காது.
பொய்யை சொல்லி ஜெயித்து விட்டோம் என்ற காரணத்தினால் மீண்டும் பொய் சொல்வதற்காக திமுக இந்தித் திணிப்பு என்ற புருடாவை விட ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லா சிபிஎஸ்சி பள்ளிகளிலும் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டு யாரை ஏமாற்ற முயல்கிறீர்கள். இந்தி திணிப்பு பற்றி பேசினால் 45 பள்ளிக்கூடத்துக்கு முன்னாலும் பாஜக தொண்டர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றார் ஆவேசமாக.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லி கொடுப்பதற்கும், அரசு இந்தியை கட்டாயம் என சொல்லி கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விருப்பம் இல்லாவிட்டால் இந்தியை படிக்க வேண்டாம் அந்த பள்ளிகள். நமது விருப்பத்தின் பேரிலே அங்கு இந்தி சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தி கட்டாயம் பள்ளிகளில் சொல்லிக்கடுக்கப்பட வேண்டும் என அரசு கூறுவது, இந்தியை திணிப்பதாகும். இதனை தான் திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.