கிரிக்கெட்
கடைசி ஓவரில் தோனி அடித்த 16 ரன்கள்: வெகுவாக பாராட்டும் சச்சின்!
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான நேற்றைய லீக் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் முன்னாள் கேப்டன் தோனியின் சிறப்பான ஆட்டம் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோனியின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. இதனை சச்சின் டெண்டுல்கர் விமர்சித்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக ஆடியதால் சச்சின் தோனியை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில், மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான ஆட்டத்தில் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா இவர்களுடைய பார்ட்னெர்ஷிப் ஆட்டத்தை மாற்றும் வகையில் இருந்தது. அவர்களுடைய கூட்டணி இல்லை என்றால் நாம் 260 என்ற ஸ்கோரை தாண்டியிருக்க மாட்டோம். குறிப்பாக கடைசி ஓவரில் தோனி அடித்த 16 ரன்களை மறக்க வேண்டாம். அவர் வலுவாக ஆட்டத்தை முடித்தார் என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, கடந்த போட்டியில் தோனியை விமர்சித்த சச்சின் தற்போது அவரை பாராட்டியுள்ளதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.