சினிமா செய்திகள்
அஞ்சலியை தேடிக் கண்டுபிடித்தாரா விஜய்சேதுபதி! சிந்துபாத் சினிமா விமர்சனம்!
மாயாவியிடம் மாட்டியிருக்கும் தனது காதலியை கண்டுபிடிக்கும் கன்னித்தீவு சிந்துபாத்தை விஜய்சேதுபதி, தனது காதலி அஞ்சலியை தேடிக் கண்டுபிடித்தாரா? இல்லையா என்பதே சிந்துபாத் படத்தின் கதை.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என இரண்டு தரமான படங்களை கொடுத்த அருண்குமார், மூன்றாவது முறையும் சமூக விழிப்புணர்வுள்ள நல்ல படத்தையே கொடுத்துள்ளார்.
ஆனால், தாமதமாக வந்தது மட்டும் தான் படத்திற்கு பலவீனம்.
மிஸ்டர் லோக்கல் படத்துடன் இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தால், நல்ல வசூல் ஈட்டியிருக்கும். பார்ப்போம், இந்த வாரம் நல்ல பாசிட்டிவிட்டி படத்திற்கு கிடைத்து வசூலை ஈட்டும் என்றும் எதிர்பார்க்கலாம்.
விஜய்சேதுபதியின் மகன் சூர்யா இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஆனால், இருவருக்கும், தந்தை மகன் கதாபாத்திரமல்ல. திருடன் சிந்துபாத்தின் அசிஸ்டெண்டாக விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும் என்பதை போல, இறுதி வரை படத்தில் பயணிக்கும் சூர்யா நடிப்பில் மிரட்டுகிறார்.
காது சரிவர கேளாதவராக விஜய்சேதுபதி, வழக்கம் போல மாறுபட்ட கதாபாத்திர ஸ்கெட்ச் தேர்வு செய்து அதில், தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்தில் சேதுபதிதான் காதும்மா.
உரக்க பேசும் பெண்ணாக வரும் அஞ்சலி, தாய்லாந்தில் வேலைக்கு செல்லும் இடத்தில், பாலியல் தொழில் செய்யும் மாஃபியாக் கூட்டத்தினரால் கடத்தப்படுகிறார். அவரை தேடிக் கண்டு பிடிக்க செல்லும் விஜய் சேதுபதி அதில் வெற்றியடைந்தாரா? இல்லையா என்பது தான் சிந்துபாத் படத்தின் மொத்த கதை.
மேலும், இந்த படத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த யாருக்கும் தெரியாத விசயங்களை இயக்குநர் அருண்குமார் தோலுரித்துக் காட்டியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
மொத்தத்தில் சிந்துபாத் படம் நல்ல கருத்து மிக்க கமர்ஷியல் படம்.
மூவி ரேட்டிங்: 3.25/5.