தமிழ்நாடு
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் இடியுடன் கூடிய மழை!
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகவும், தென்மேற்குப் பருவமழை காரணமாகவும் மழை பொழிய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி, தென் தமிழகத்தின் ஓரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.