தமிழ்நாடு
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் அளிக்க முன்வந்த கேரளாவை வரவேற்கிறேன்; ஆனால்?
தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்து வருகின்றனர். மறுபக்கம் தமிழகத்துக்குக் கேரளா தண்ணீர் அளிப்பதற்கான பேச்சுவாரத்தியில் ஈடுபட்டது.ஆனால் அதை தமிழக அரசு மறுத்துவிட்டது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார்.
இதை அடுத்து கேரளா தண்ணீர் வழங்குவதாகக் கூறும் நிலையில், அதை தமிழக அரசு ஏன் ஏற்க மறுக்கிறது என்ற சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்தன.
இந்நிலையில் நேற்று பிறகல் 1:30 மணியளவில் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்துக்குத் தண்ணீர் அளிக்க முன்வந்த கேரளாவை வரவேற்கிறோம்.
ஆனால் சென்னைக்கு மட்டும் ஒரு நாளைக்கு 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. ஆனால் கேரளா ஒரு நாளைக்கு மட்டும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எனவே தினமும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீரைக் கேரளா அளிக்க முன்வருமே என்றால் அது கண்டிப்பாகத் தமிழகத்திற்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.
மேலும் சென்னையின் தண்ணீர் தேவையைக் குறைக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் நீர் கொண்டு வரப்படும்.
அமைச்சர்கள் குடியிருப்புகளுக்குத் தினமும் 2 லாரி தண்ணீர் என சிறப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” என்றும் தெரிவித்தார்.