சினிமா செய்திகள்
ரெஜினா கசாண்ட்ரா இனி சிங்கிள் இல்லை?
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிப் படங்களிலும் நடித்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ராவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
பிரசன்னா, லைலா நடிப்பில் தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா கசாண்ட்ரா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சந்திரமவுலி, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், பாலிவுட்டில் நடிகை சோனம் கபூர் நடித்த ”ஏக் லட்கி கோ தேக்கா” படத்தில் லெஸ்பியனாக நடித்து மிரட்டினார்.
இந்நிலையில், ரெஜினா கசாண்ட்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது வதந்தியா அல்லது உண்மையா என்பது இதுவரை தெரியவில்லை. பரவி வரும் இந்த செய்தி குறித்து ரெஜினா கசாண்ட்ரா மறுப்போ அல்லது விளக்கமோ கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.