Connect with us

தமிழ்நாடு

டெல்லியில் மண்டியிட்டு மடிப்பிச்சை: எஸ்.பி.வேலுமணியை விளாசிய மு.க.ஸ்டாலின்!

Published

on

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து குடிநீர் பிரச்சனையை போக்க உரிய நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் திருந்தியபாடில்லை. நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றித் துளியும் கவலைப்படாமல், கட்சிக் கூட்டங்களையும் நடத்திக் கொண்டும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டும், மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று அலட்சியமாகவும் ஆணவத்துடனும் இருக்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சென்னைக்கு எவ்வளவு குடிநீர் தேவை என்பதைக் கூடத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் தினமும் 7000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்து கொண்டு வருகிறோம் என்று இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவரே பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறிக்கொட்டி, பத்திரிக்கையாளர் நகைப்புக்குப் பாத்திரமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

கமிஷன் ஒன்றே கண்கண்ட தெய்வம் என்று கண்களை மூடித் தவமிருக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணிக்குத் தெரியாமல் இருப்பது அவரது பணி அமைச்சர் பணியல்ல. கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் மட்டுமே என்பது ஊருக்கும் உலகத்திற்கும் தெளிவாகிறது. சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் ஒரு நாளைக்கு சென்னை மக்களுக்கு 825 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய சூழலில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி, ஜூன் 15-ஆம் தேதி வரைதான் 500 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று கூறி விட்டு, பிறகு நவம்பர் வரைகூட ஓரளவு சப்ளை செய்து விட முடியும் என்று கூறினார்.

அப்படியிருக்கும் போது குடியிருப்பு வாசிகள் ஆன்லைனில் புக்கிங் செய்யும் டேங்கர் லாரி குடிநீருக்காக 15 முதல் 18 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏன் வந்துள்ளது? தெருத்தெருவாக மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு சைக்கிளிலும், ரிக்‌ஷாக்களிலும் தொலை தூரம் சென்று ஒரு குடம் தண்ணீர் சேகரிக்கத் தள்ளப்பட்டுள்ளது ஏன்? மெட்ரோ வாட்டர் குழாய்களில் வரும் குடிநீரும் பல இடங்களில் துர் நாற்றம் வீசுவது ஏன்? தண்ணீர் இல்லாமல் பல உணவகங்கள் மூடப்படுவது ஏன்? தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் ஐ டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை.

சென்னைக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரைப் பெறுவதற்குக் கூட ஆந்திர மாநில முதல்வரைச் சந்திக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக டெல்லிக்குச் சென்று பாஜக மத்திய அமைச்சர்களைச் சந்தித்து எங்கள் கட்சிப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள், எங்கள் மீது எந்த ஊழல் நடவடிக்கையும் எடுத்து விடாதீர்கள் என்று மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்டுக் கெஞ்சுவதை மட்டுமே உள்ளாட்சித்துறை அமைச்சர் இந்த மூன்று வருடங்களில் செய்து கொண்டிருக்கிறார்.

புதிய மெகா கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றவோ, கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டங்களை விரைந்து முடிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத்திலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும் டெண்டர்களில் கமிஷன் வசூல் செய்வதில் காட்டும் அக்கறையில் ஒரு துளியை உள்ளாட்சித் துறை அமைச்சர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் காட்டியிருந்தால்- சென்னைக்கான அந்த இரு திட்டங்களை நான்குவருடத்தில் நிறைவேற்றியிருந்தால், இன்று சென்னை மக்கள் குடிநீர்ப் பஞ்சத்தில் துடிக்க வேண்டிய நிலை, துயரப்பட வேண்டிய நிலை வந்திருக்காது.

ஆகவே சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட வேண்டும். உள்ளாட்சித்துறை அமைச்சரின் படு தோல்விதான், இன்று சென்னை மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு மக்களும் குடிநீருக்கு அலையும் கொடுமைக்கு முழுக்காரணம். ஆகவே இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அவர் ராஜினாமா செய்யத் தவறினால், முதலமைச்சர் உடனடியாக, இன்றைய குடிநீர்ப் பஞ்சத்திற்கும் கோடானுகோடி மக்களின் துன்பத்திற்கும் வித்திட்ட அவரை, அமைச்சர் பதவியிலிருந்து தயவு தாட்சண்யம் பார்க்காமல் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என விளாசியுள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா19 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!