தமிழ்நாடு
மறக்காமல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஒரு கூடை மாம்பழங்களுடன் சென்ற விந்தியா!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார் நடிகை விந்தியா. தேர்தல் நேரங்களில் இவரது பேச்சு மிகவும் கவனம் பெறும், திமுகவை அந்த அளவுக்கு தனது பேச்சால் விமர்சனம் செய்பவர் விந்தியா.
ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அப்படியே ஒதுங்கிவிட்டார் விந்தியா. ஆனால் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அவ்வப்போது சென்று அஞ்சலி செலுத்துவார். இந்நிலையில் நேற்று மாலை ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற விந்தியா அங்கு ஒரு கூடை மாம்பழங்களை வைத்து வணங்கி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது ஆண்டுதோறும் மாம்பழ சீசனில் போயஸ் கார்டன் சென்று மாம்பழங்களை ஜெயலலிதாவுக்கு கொடுப்பது விந்தியாவின் வழக்கம். இந்நிலையில் இதனை மறக்காத விந்தியா தற்போது மாம்பழ சீசன் என்பதால் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மாம்பழங்களை வைத்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.