சினிமா செய்திகள்
உலகக்கோப்பை போட்டியை நேரில் கண்டு ரசித்த அனிருத்!
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் கண்டு ரசித்துள்ளார்.
ஐபிஎல் ஜுரம் முடிந்தவுடனே கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை ஜுரம் தொற்றிக் கொண்டு விட்டது.
நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான் சதம், ரோகித், கோலி அரைசதம், ஹர்திக் பாண்டே மற்றும் தோனி விளாசல் என நேற்று இந்திய அணி 50 ஓவர் முடிவில் 352 ரன்கள் குவித்து பவுண்டரி மழையை பெய்தது.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 316 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கிரிக்கெட் மைதானத்தில் நேரில் கண்டு ரசித்த இசையமைப்பாளர் அனிருத் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அனிருத் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.