Connect with us

தமிழ்நாடு

சில்லரை போட்டவுடன் கலகலவென ஆடும் ஆடிட்டர்: குருமூர்த்தியை விளாசிய அமைச்சர் ஜெயக்குமார்!

Published

on

கேலிச்சித்திரம் மூலம் அதிமுகவை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரிக்கையை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் அமைச்சரவையில் சேர்வதற்கு அதிமுக பிச்சை எடுப்பது போல கேலிச்சித்திரம் ஒன்றை துக்ளக் பத்திரிக்கை கடந்த 5-ஆம் தேதி வெளியிட்டது. இது சமூக ஊடகங்களில் அதிக கவனம் பெற்றது. இந்நிலையில் இதற்கு அதிமுக கடுமையான பதிலடிகளை கொடுத்து வருகிறது.

கடந்த 5-ஆம் தேதி வெளிவந்த துக்ளக் இதழின் 9-ம் பக்கத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற செய்துவரும் முயற்சிகளை கேலி செய்யும் விதமாக கேலிச்சித்திரம் ஒன்று வெளியானது. அதில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு உள்ளது. மேலும் அதில், உஸ்ஸ்… யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம் என எழுதப்பட்டுள்ளது.

இது மத்திய அமைச்சர் பதவிக்கு பாஜகவிடம் அதிமுக பிச்சை எடுப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுகவை இவ்வாறு கடுமையாக விமர்சிப்பது முதல்முறையல்ல, இதற்கு முன்னர் அதிமுக தலைவர்களை ஆண்மையற்றவர்கள் என குறிக்கும் ஆங்கில வார்த்தையால் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இவை இரண்டிற்கும் சேர்த்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா தரங்கெட்ட பத்திரிகையும் தரம்தாழ்ந்த விமர்சனமும் என்ற தலைப்பில் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளது.

அதில், பாஜக அமைச்சர்கள் உள்ளே அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், கழகம் வெளியே நின்று சாப்பிட ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது துக்ளக். பொதுவாழ்க்கை என்பது சேவையற்றது. ஆனால் இதற்கு பதிலாக சாப்பிடுவதே அரசியல் என்பதுபோல துக்ளக் வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் பாஜக அமைச்சர்களைத்தான் மலிவாகச் சித்தரித்து அவர்களின் நேர்மையை களங்கப்படுத்தி இருக்கிறது.

அதிகாரத்திற்கு ஏங்குவதாக அதிமுவை அப்பத்திரிகை விமர்சித்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகாலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் உள்ள கட்சி அதிமுக. மத்திய அரசின் அதிகாரங்களுக்கு அதிமுக ஒருபோதும் மல்லுக்கு நின்றதில்லை, மண்டியிட்டும் கிடந்ததில்லை என்பதே வரலாறு. ஆனால் இதையெல்லாம் அறியாதவர்கள் போல கழகத்தின் அமைச்சர்களை இம்போடேட் என்றும் பந்திக்காக அலைபவர்கள் என்றும் ஒரு குரூரத்தோடு ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் துக்ளக் பத்திரிகை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தரம்தாழ்ந்து விமர்சித்துவருகிறது.

சோ நடத்திய பாரம்பரிய பத்திரிகை இப்போது நாளேல்லாம் பெட்டிகடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்றப் பத்திரிகையாக மாறிவிட்டது. அதனால் இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்கு செவிமடுக்காமல் கடந்து போவதே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும் என மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளது அதிமுக தரப்பு.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தி ஒரு பத்திரிகை ஆசிரியர். துக்ளக் ஆசிரியராக சோ இருந்தபோது இதுபோன்ற விமர்சனங்கள் வந்ததில்லை. அவர் ஏன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. முன்பு அதிமுகவை திட்டி எப்படி வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பது உங்களுக்குத் தெரியும். அதுபோன்று திரும்பவும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம்.

கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெறிவதை அவர் நிறுத்த வேண்டும். பத்திரிகை ஆசியர்களுக்கென்று ஒரு வரையறை இருக்கிறது. அதற்காக எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாமா? நாங்கள் விமர்சனம் செய்தால் குருமூர்த்தி தாங்கமாட்டார். இத்தோடு அடக்கி வாசிப்பது நல்லது என்பதை குருமூர்த்திக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். புடவையும் பட்டாடையும் பெட்டிக்குள் இருக்கும். ஆனால் கந்தல்தான் சில்லரை போட்டவுடன் கலகலவென ஆடும். அப்படிப்பட்டவர்தான் ஆடிட்டர் என விளாசினார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!