தமிழ்நாடு
மக்களவையில் மோடிக்கு எதிராக போராடுவோம்: ஜோதிமணி ஆவேசம்!
மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த உறுப்பினருமான தம்பிதுரையை கரூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. இவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க கரூரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நன்றி தெரிவிக்கும் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, தமிழகத்தில் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. பிரதமராக பொறுபேற்கும் மோடிக்கு வாழ்த்துக்கள். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை ஒடுக்கும் வகையிலே மோடி ஆட்சி நடத்தினார் என குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் மோடியின் தமிழகத்தை ஒடுக்கும் இந்த மனநிலை மாற வேண்டும். அப்படி அவருடைய மனநிலை மாறவில்லை என்றால் தமிழகத்தை சேர்ந்த திமுக எம்.பிக்களுடன் இணைந்து மக்களவையில் மோடிக்கு எதிராக போராடுவோம் என்றார் ஜோதிமணி.