சினிமா
செல்வராகவன் இயக்கத்தில் சூரியா நடித்து வரும் என்ஜிகே ஷுட்டிங் படப்பிடிப்பு ரத்து
சென்னை: நடிகர் சூர்யாவை ரசிகர்கள் ரவுண்டு கட்டியதால், என்.ஜி.கே ஷுட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தின் படப்பிடிப்புத் தற்போது ஆந்திர மாநிலம் ராஜாமுந்திரியில் நடைபெற்று வருகிறது.
இதனால் படப்பிடிப்பு நடக்கும் இடம் நோக்கி தினமும் 5000திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் சிக்கிய சூர்யா வெளியே வருவதற்குள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
அதோடு, முதல் முறையாகப் படத்தின் அவரது கதாப்பாத்திரத்தின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் சமூக ஆர்வலராக நடிக்கும் சூர்யா இப்படத்தில் நந்தக் கோபாலன் குமரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் சூர்யாவுன் இணைந்து சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதனால் சூர்யாவை கேரவனிலிருந்து ஷாட் வைக்கும் இடத்துக்குப் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரவேண்டியதிருக்கிறது. தினமும் ரசிகர்கள் கூடுவதால் ராஜமுந்திரி படப்பிடிப்பை விரைவில் முடித்துத் திரும்ப முடிவு செய்திருக்கிறார்கள். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.