சினிமா செய்திகள்
புதுப்பேட்டை 2வுக்கு நோ சொல்லிய தனுஷ்; செல்வராகவன் எடுத்த அதிரடி முடிவு!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படம் நாளை அமெரிக்காவிலும், நாளை மறுநாள் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் அதிக அளவிலான தியேட்டர்களில் ரிலீசாகின்றது.
என்ஜிகே படத்திற்கான புரமோஷனில் பிசியாக இருந்து வரும் செல்வராகவன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புதுப்பேட்டை 2 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால், தம்பி தனுஷ், புதுப்பேட்டை 2 எடுக்கிறோம்னு சொதப்பிட்ட நல்லா இருக்காது. அத கொஞ்சம் வெயிட் பண்ணி பண்ணலாம்னு சொல்லிட்டாரு.. அதனால், இப்போ ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை கார்த்தியை வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான கதை பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என செல்வராகவன் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரிலீஸ் சமையத்தில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், அதன் பின்னர் அந்த படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவாகி இன்னமும் அடுத்த பாகத்திற்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.