இந்தியா
பைத்தியக்கார நாய், குரங்கு இப்படியெல்லாம் என்னை திட்டினார்கள்: மோடி பகிரங்க குற்றச்சாட்டு!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில் ஐந்து கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தலுக்கு பின்னர் வரும் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்தார். தன்னை காங்கிரஸ் தரக்குறைவாக நடத்துவதாகவும், தனது தாயை கூட தரக்குறைவாக பேசுவதாகவும் பேசினார் மோடி.
அப்போது பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து என்னை தவறான வார்த்தைகளால் திட்டி வருகிறது. ஹிட்லர், தாவூத் இப்ராகிம், முசோலினி போன்றோருடன் எல்லாம் என்னை ஒப்பிட்டது காங்கிரஸ். மேலும் புழு பூச்சியுடன் ஒப்பிட்டனர். காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை பைத்தியக்கார நாய் என்றார். மற்றொருவர் என்னை குரங்கு என்றார்.
என்னுடைய தயை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவரையும் அவர்கள் அவதூறான வார்த்தையால் பேசினார்கள். எனது தந்தை யார் என்று கேட்டனர். அரச குடும்பம் என நினைத்த காங்கிரஸ் குடும்பத்தினரை சிறை வாசலில் நிற்க வைத்து ஜாமீனுக்காக போராட வைத்துள்ளேன் இந்த காவலாளி என அதிரடியாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் மோடி.