இந்தியா
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை: சு சுவாமி
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர், திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் வர இருக்கும் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவரான அமித் ஷா பங்கேற்க உள்ளார் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.
Happy to learn that Party President Amit Shah has decided not to attend the DMK meet.
— Subramanian Swamy (@Swamy39) August 24, 2018
ஆனால் இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களில் பாஜக மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமனியன் சுவாமி திமிக தலைவரின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரான அமித் ஷா பங்கேற்கவில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்
I am in the UK for the next couple of days. My packed schedule today includes interactions at the Institute of Strategic Studies, Parliament & the London School of Economics. I also have a meeting with members of the Labour Party’s Shadow Cabinet & with business leaders.
— Rahul Gandhi (@RahulGandhi) August 24, 2018
அதே நேரம் காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி அடுத்தச் சில நாட்களுக்குத் தான் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். எனவே ராகுல் காந்தியும் கருணாநிதி அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.