இந்தியா
குழந்தைகளுடன் பிரச்சாரம் செய்த பிரியங்காவிற்கு நோட்டீஸ்!
உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் தனது அண்ணன் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்போது பிரியங்கா காந்தியுடன் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது போல் வீடியோ வெளியானதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் உங்களுடன், குழந்தைகள் பிரசாரத்தில் கலந்துகொண்டது மற்றும், குழந்தைகள் தரக்குறைவான வாசகங்கள் மற்றும் மோசமான வார்த்தைகளில் கோஷம் போடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
பிரச்சாரத்தில் கலந்துகொண்ட குழந்தைகளின் விபரங்களை இன்னும் 3 நாட்களில் அனுப்ப வேண்டும் என பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.