தமிழ்நாடு
25 நாட்களில் ஆட்சியை மாற்றப்போகும் துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!
மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் பொங்களூர் பழனிசாமி திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்ட சூலூரில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில், எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நூற்றுக்கு நூறு திமுக வெற்றி பெறும். சூலூரையும் ஜெயித்து கொடுங்கள். 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக்கொடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை விமான நிலையதில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், வரும் ஜீன் மாதம் திமுக ஆட்சி அமைக்கப்போவதாக துரைமுருகன் கூறுவது அவரது கற்பனை. வருகிற ஜூன் அல்ல, 2021 ஜூன் வந்தால் கூட அதிமுகதான் ஆட்சியில் நீடிக்கும் என கூறினார்.