சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் ஓட்டுப் போட்டதில் பஞ்சாயத்து; அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்கிறது
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு விரல் புரட்சி செய்து வாக்களித்ததாக செய்திகள் பரவின. இந்நிலையில், தற்போது, சிவகார்த்திகேயன் வாக்களித்ததில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை ஓட்டுப் போட அனுமதித்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு புது வெடிகுண்டை வீசியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பொதுமக்கள் முதல் நட்சத்திர நடிகர்கள் என பலரும் உற்சாகமாக தங்களின் வாக்குகளை செலுத்தினர்.
இதில், நடிகர் சிவகார்த்திகேயன் காலை 8 மணிக்கு தனது மனைவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போட போனார். ஆனால், அவரது மனைவியின் பெயர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்ததாகவும், சிவகார்த்திகேயன் பெயர் இடம் பெறாததால் வாக்களிக்க அனுமதி இல்லை என்ற தகவல் வைரலாக பரவியது.
அதன் பின்னர், மாலை 3 மணி அளவில் உரிமைக்காக போராடி ஓட்டுப் போட்டதாக சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தில் மை விரலுடன் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போது, இந்நிலையில், தற்போது, சிவகார்த்திகேயன் வாக்களித்ததில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை ஓட்டுப் போட அனுமதித்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார்.