சினிமா செய்திகள்
பூஜையுடன் ஆரம்பமானது ’சூர்யா 38’!
![201904071243424049_1_suriya-5._L_styvpf - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/04/201904071243424049_1_suriya-5._L_styvpf.jpg)
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே மற்றும் காப்பான் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி உள்ளன. இந்நிலையில், இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்காராவின் புதிய படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான பூஜை சென்னையில் நடந்துள்ளது.
மாதவன் – ரித்திகா சிங் நடிப்பில் பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான இறுதிச்சுற்று படம், இயக்குநர் சுதா கொங்காராவுக்கு கோலிவுட்டில் பெரிய வரவேற்பை அளித்து. அவர், அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து சூர்யாவின் 38வது படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான 8 தோட்டாக்கள் மற்றும் ஜி.வி. பிரகாஷின் சர்வம் தாள மயம் படங்களின் நாயகி ஆவார். மேலும், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் நிக்கேத் பொம்மிரட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னையில் நடைபெற்ற படப்பூஜையில், சூர்யா, சிவகுமார், கார்த்தி, அபர்ணா முரளி, சுதா கொங்காரா, ஜி.வி. பிரகாஷ், காளி வெங்கட், நிக்கேத் பொம்மிரட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.