தமிழ்நாடு
உடைந்து விழுந்த திருச்சி முக்கொம்பு அணை!
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால் அங்கு உள்ள நீர் அப்படியே கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 1836ம் ஆண்டு, இந்த அணை கட்டப்பட்டது.
சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர் மூலம் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை உடைந்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.