தமிழ்நாடு
குழந்தைக்கு தினகரன் என பெயர் வைத்த அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்!
![Charubala Tondaiman - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/04/Charubala-Tondaiman.jpg)
அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க கூடிய மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக உள்ளது. இதில் வேட்பாளர் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவமும் நடந்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பலமுனை போட்டி நிலவினாலும், அதிமுக, திமுக, அமமுக கட்சிகளுக்கிடையே தான் பிரதான போட்டியே நிலவுகிறது. இதில் திருச்சி தொகுதியில் அமமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் சாருபாலா தொண்டைமான். இவருக்கு தொகுதியில் அறிமுகமே தேவையில்லை. நன்கு பிரபலமானவர்.
புதுக்கோட்டை மன்னர் பரம்பரையை சேர்ந்த சாருபாலா தொண்டைமான் இரண்டு முறை மேயராக திருச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் சூறாவளி போன்று சுழன்று வருகிறார். தீவிர பிரச்சாரத்தில் உள்ள சாருபாலா தொண்டைமானிடம் நரிக்குறவர் தம்பதியினர் தங்கள் குழந்தையை கொண்டு வந்து பெயர் வைக்க சொல்லி கொடுத்தனர். அந்த குழந்தையை சந்தோஷத்துடன் வாங்கி தனது தலைவர் பெயரான தினகரன் என்று பெயர் சூட்டினார்.