தமிழ்நாடு
முகிலன் என்னை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டார்: பரபரப்பு பாலியல் புகார்!
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தன்னை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டதாக பெண் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சுற்றுசூழல் செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அவரை கண்டுபிடிக்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளும் வருகின்றன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் யார் என கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் சில ஆதாரங்களை வெளியிட்டார் முகிலன். ஆனால் அதற்கு அடுத்த நாளே அவரை காணவில்லை.
இது தொடர்பான வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் தற்போதுவரை முகிலன் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் பெண் ஒருவர் முகிலன் மீது கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், முகிலன் தன்னிடம் அன்பாகவும், பாசமாகவும் பழகினார். மற்றவர்களிடம் மகள் என்று என்னை அறிமுகம் செய்துவைத்தார். ஆனால் என்னிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு கொள்ள முயற்சி செய்தார். தான் மறுத்தும் பலமுறை என்னை மிரட்டி உடலுறவு கொண்டு, இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வருகிறார் என கூறியுள்ளார். இதனையடுத்து குளித்தலைக் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளில் முகிலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.