Connect with us

இந்தியா

மோடியின் உரைக்கு அனுமதி வாங்கவில்லை: தேர்தல் ஆணையம் தகவல்!

Published

on

நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை அரசியல் ஆதாயத்துக்காக என குற்றச்சாட்டு எழுந்தநிலையில், மோடி ஆற்றிய உரைக்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் அலுவலகம் வாங்கியதா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே ஆற்றிய உரை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தல் ஆதாயத்துக்காகவே மோடி இந்த உரைய ஆற்றினார் என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார், அப்போது ஒரு முக்கியமான செய்தியை சொல்ல உள்ளார் என்ற தகவல் நேற்று வெளியானது. ஒட்டு மொத்த நாடும் உடனடியாக உஷார் ஆனது. ஏதோ ஒரு அறிவிப்பு வரப்போகிறது என்ற அச்சத்தில் இருந்தனர்.

காரணம் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின்னர் எந்த பிரதமரும் இதற்கு முன்னர் ஊடகத்தின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றியதில்லை. இதுவே முதல்முறை என்பதால் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனால் சிறிது நேரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி வின்வெளியில் டிஆர்டிஓ நிகழ்த்திய சாதனையை தனது சாதனையாக பெருமிதம் கொண்டார்.

விஞ்ஞானிகள் நிகழ்த்திய இந்த சாதனையை விஞ்ஞானிகளே அறிவித்திருக்கலாம் ஆனால் அதனை தனது சாதனையாக தேர்தல் விதி அமலில் இருக்கும் போது மோடி அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் பிரச்சாரமாக இதனை மோடி மாற்றியுள்ளார் என தேர்தல் ஆணையத்தில் எதிர் கட்சிகள் புகார் அளித்துள்ளன. மோடியின் இந்த செயல் நாடு முழுவதும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் மோடி ஆற்றிய உரைக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கப்பட்டதா என்ற கேள்வியும் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து மோடி தேர்தல் நடத்தை விதிமுறையை மீறினாரா என்பதை விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது தேர்தல் ஆணையம். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதவி தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா, பிரதமரின் இந்த உரை குறித்து பிரதமர் அலுவலகம் தேர்தல் ஆணையத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவோ, அனுமதி பெறவோ இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு ஊடகங்களான தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது இதனை விசாரிக்கும் குழு. இந்த சூழ்நிலையில், நான் விண்வெளியிலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியவன் என்கிற ரீதியில் மோடி பேசியிருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா12 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்