ஆன்மீகம்
சனீஸ்வரரின் சதயம் நட்சத்திரப் பெயர்ச்சி: கவலையில் கண்ணீர் விடப்போகும் ராசிகள்!
சனி கிரகத்தின் சதயம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த சிரமம் தந்த காலம் நெருங்கிவிட்டது. சனீஸ்வரர் ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் மாறி நடப்பதால், அதற்கு இணையாக ராகுவின் தாக்கத்தையும் சேர்த்து சில ராசிகள் கடும் விளைவுகளை எதிர்கொள்ளப்போகின்றன. அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் இந்த பெயர்ச்சி பலருக்கு கவலையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
1. மீன ராசி: சனியின் வக்ர இயக்கம் மீன ராசியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். மன அமைதி குறைந்து, உறவுகளில் சிக்கல்கள் உருவாகலாம். சனிக்கிழமைகளில் ஈஸ்வரன் கோவிலில் விளக்கேற்றி சனி பகவானை வணங்குவது நன்மை தரும்.
2. மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் சிக்கல்கள் தோன்றும். உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்தாதால், அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். வாகனங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
3. விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மோசமான காலமாக இருக்கும். வேலை, குடும்பம், உறவுகளில் சிக்கல்கள் உருவாகும். இறை வழிபாடு மற்றும் வாய்க்கட்டுப்பாடு அவசியம்.
4. துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களின் மனநிலையை பாதிக்கும் இந்த பெயர்ச்சி, வேலைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சக ஊழியர்களின் தொல்லையால் வேலைகளில் நட்டம் ஏற்படக்கூடும். மேலும், தொழிலிலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும்.