தமிழ்நாடு
கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனுக்களை ஏன் நிராகரிக்கவில்லை? – கெளதமன்
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றது.
“அதில் தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி உள்ளிட்டவர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க போதிய காரணங்களிருந்தும் நிராகரிக்கப்படவில்லை. இது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல்” என்று தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் மற்றும் திரைப்பட இயக்குநருமான கெளவுதமன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்றத் தொகுதிகள் வேட்பாளர்கள் பரிசீலனையின் போது திமுக வேட்பாளர் கனிமொழி தனது கணவருக்குச் சிங்கப்பூரில் உள்ள வணிகம் குறித்த பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்று அவரது வேட்புமனு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது.
இதே போன்று பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்புமனுவும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை அவர் மறைத்துள்ளதாகவும், அவரது கணவரின் சொத்து மற்றும் வருமான விவரங்களை இணைக்கவில்லை என்று காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது.
சுமார் மணி நேரத்திற்கும் மேலாக இருவரின் மனுக்களும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, இரண்டு கட்சியினரிடமும் கருத்துக்கேட்கப்பட்ட பின்னர் ஏற்கப்பட்டுள்ளது. பிற கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களைச் சிறு காரணங்களுக்காக எல்லாம் நிராகரிக்கப்படும் நிலையில் இவர்கள் இருவரும் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.