சினிமா செய்திகள்
எல்லாத்துக்கும் ரெடியாக சொன்னார் இயக்குநர் – மாளவிகா அவினாஷ்!
கே.ஜி.எஃப் படத்தில், தீபா எனும் செய்தி நெறியாளராக நடிகை மாளவிகா அவினாஷ் நடித்திருந்தார். கன்னட திரையுலகின் முதல் பிரம்மாண்டமான படமாக உருவான கே.ஜி.எஃப், கன்னடம், தமிழ், இந்தி என பல மொழி ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து மாபெரும் வெற்றியை பெற்றது.
முதல் பாகம் மாளவிகா மூலமாகவே நகரும் படியாக இயக்குநர் பிரஷாந்த் இயக்கியிருந்தார். இந்நிலையில், இரண்டாவது பாகத்தில், தனது கதாபாத்திரம் மேலும், முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என இயக்குநர் பிரஷாந்த் கூறியதாக, மாளவிகா அவினாஷ் தெரிவித்துள்ளார்.
யாஷ் நடிப்பில், மூன்று பாகங்களாக வரவுள்ள கே.ஜி.எஃப் படம், கன்னட உலகின் பாகுபலியாக பார்க்கப்படுகிறது. கோலார் தங்க சுரங்கத்தின் கதையை மையப்படுத்தி கற்பனை மற்றும் பிரம்மாண்டம் கலந்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.