சினிமா செய்திகள்
ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த ரஜினி!
சென்னையில் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணியை சென்னை அணி, 70 ரன்களுக்குள் சுருட்டி வெற்றியும் பெற்றது.
சென்னையில், நடந்த ஐபிஎல் போட்டியை நடிகர் ரஜினி, ரசிகர்களோடு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கண்டுகளித்தார். ரஜினி மேட்சை பார்த்து ரசித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
மேலும், நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சதிஷ் இந்த போட்டியை கண்டு களித்தனர்.
நடிகர் விஷ்ணு விஷால், போட்டி சுவாரஸ்யமே இல்லாமல், முடிந்து போர் அளித்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.