வணிகம்
பட்ஜெட் 2024: தமிழ்நாட்டுக்கு கிடைத்து என்ன?
தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக 2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சிறப்பான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழில் துறை, வேளாண்மை மற்றும் டிஜிட்டல் துறைகளில் முன்னேற்றம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் வளர்ச்சி:
விசாகப்பட்டினம்-சென்னை தொழில் வழித்தடத்தில் உள்ள கொப்பார்த்தி பகுதியிலும், ஐதராபாத்-பெங்களூரு தொழில் வழித்தடத்தில் உள்ள ஓர்வக்கல் பகுதியிலும் அத்தியாவசிய கட்டமைப்புகளான குடிநீர், மின்சாரம், ரயில்வே மற்றும் சாலைகள் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் இந்த பகுதிகளில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலநிலை தாங்கும் திறன் கொண்ட வேளாண்மை:
புதிய உயர் விளைச்சல் தரும் மற்றும் காலநிலை தாங்கும் திறன் கொண்ட பயிர் வகைகளை வெளியிடுவதில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு விவசாயிகள் 32 வகையான தானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 109 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பயனடைவார்கள்.
இயற்கை வேளாண்மை முயற்சிகள்:
நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் உட்பட, சான்றிதழ் மற்றும் பிராண்டிங் ஆதரவுடன் இயற்கை வேளாண்மையில் இணைக்கப்படுவார்கள். அறிவியல் நிறுவனங்கள் மற்றும் விருப்பமுள்ள கிராம பஞ்சாயத்துகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். (பட்ஜெட் உரை)
வேளாண்மைக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு:
மூன்று ஆண்டுகளுக்குள் விவசாயிகள் மற்றும் அவர்களது நிலங்கள் உள்ளடங்கும் வகையில் வேளாண்மைக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (DPI) செயல்படுத்துவதை அரசு ஊக்குவிக்கும். தமிழ்நாடு உட்பட 400 மாவட்டங்களில் குறுவைப்பருவத்திற்கான டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு தொடங்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, வேளாண்மை துறையின் நிலைத்தன்மை மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.