இந்தியா
வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!
![Bengaluru Mall - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2024/07/Bengaluru-Mall.webp)
பெங்களூரில் உள்ள பிரபல ஜிடி வர்ல்டு மாலுக்கு வேட்டி கட்டி சென்ற விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த வணிக வளாகத்தை ஒரு வார காலத்திற்கு மூட பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தனது மகனுடன் திரைப்படம் பார்க்க மாலுக்கு சென்ற விவசாயிக்கு, வேட்டி அணிந்திருந்ததால் மால் நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை விவசாயியின் மகன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பெங்களூரு மாநகராட்சி வணிக வளாகத்திற்கு ஒரு வார காலத்திற்கு சீல் வைத்தது.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தை கிளப்பியுள்ளது. பலரும் விவசாயிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் மாநகார்ட்சியின் நடவடிக்கைக்கு பலரரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.