இந்தியா
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பக்ரீத் வாழ்த்து!
பக்ரீத் பண்டிகையை 2018 ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப் படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்குத் தமது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக’ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நன்னாளில், தியாக உணர்வைப் போற்றிக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ள குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பலதரப்பட்ட சமூகத்தில், அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த உறுதியேற்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.