சினிமா
வெறும் ஜட்டியோட நில்லு.. அப்ப தான் சான்ஸ்.. பிரியங்கா சோப்ராவுக்கே இந்த நிலைமையா?
உலக அழகி பட்டத்தை கடந்த 2000ம் ஆண்டு வென்று அசத்திய பிரியங்கா சோப்ரா தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் தான் அறிமுகமானார். அதன் பின்னர், பாலிவுட்டில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த நிலையில், பாலிவுட் நடிகையாகவே மாறி விட்டார்.
ஷாருக்கான், சல்மான் கான் என அனைத்து முன்னணி இந்தி நடிகர்களுடனும் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா சில ஆண்டுகளாக இந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
அதற்கு பதிலாக ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி அங்கே பல படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து மாஸ் காட்டி வருகிறார் பிரியங்கா சோப்ரா.
சமீபத்தில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் இருந்து ஏன் விலகிட்டீங்க என்கிற கேள்விக்கு நான் பாலிவுட்டில் இருந்து விலகவில்லை. ஆனால், அங்கே என்னை தொடர்ந்து சிலர் நடிக்க விடவில்லை. தொடர்ந்து கார்னர் செய்தனர். அதனால் தான் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஹாலிவுட் பக்கம் ஒதுங்கினேன் என பேசியதும் அதற்கு காரணமே கரண் ஜோஹர் தான் என பாலிவுட் ரசிகர்கள் விளாசினர்.
அவுட்சைடர்களை வாழ விடாமல் செய்து வருகிறார் என்றும் வாரிசு நடிகர்களை வளர்த்து வருகிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின.
இந்நிலையில், இன்னொரு வெடிகுண்டை பாலிவுட் பக்கம் வீசியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. அது என்னவென்றால், தனக்கும் பாலிவுட்டில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டது என்றும் ஒரு படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்ற போது ஒரு இயக்குநர், வெறும் ஜட்டியோட வந்து நில்லு நான் பார்க்கணும் என காமவெறியுடன் சொன்ன நிலையில், அந்த வாய்ப்பே வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு வந்து விட்டேன்.
அந்த இயக்குநரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால், பாலிவுட்டில் இது போன்ற பல காஸ்டிங் கவுச்சுகள் அரங்கேறி வருவது பல நடிகைகளுக்கும் ஆபத்தான ஒரு விஷயம் எனக் கூறி அடுத்த தீயை பற்ற வைத்திருக்கிறார்.