Connect with us

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published

on

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு மனுக்கள் மீதான வழக்கு, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பினை வாசித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு அளித்துள்ள ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டினை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பின்னர், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

நீதிமன்றம் முன்னதாக அறிவித்த தீர்ப்பில் இருந்த குறைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் சரி செய்து விட்டது. தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லும். கலாச்சாரம் என்றாலும், துன்புறுத்தலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தமிழக சட்டத்திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிகள் உறுதியாக பின்பற்றப்பட வேண்டும்.

மனுக்கள் தள்ளுபடி

ஜல்லிக்கட்டில் உள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், தமிழ்நாட்டின் சட்டம் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நிமிடம் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?