Connect with us

தமிழ்நாடு

மதுரை மெட்ரோ இரயில் திட்டம்: வைகை ஆற்றில் மண் பரிசோதனை தொடக்கம்!

Published

on

தமிழ்நாட்டில் சென்னையைப் போலவே, மதுரையிலும் மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் வேகமெடுத்து உள்ளன. இதற்காக தற்போது, வைகை ஆற்றின் நடுவில் மண் பரிசோதனை தொடங்கி உள்ளது.

மதுரை மெட்ரோ இரயில் (Madurai Metro Train)

தமிழ்நாட்டின் தூங்கா நகரமான மதுரை மாவட்டத்தில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் சுமார் 31 கி.மீ. தொலைவுக்கு 18 இரயில் நிலையங்களுடன் கூடிய மெட்ரோ இரயில் சேவையை செயல்படுத்துவதற்கான பணிகளை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் சுமார் 26 கி.மீ. தொலைவிற்கு மேம்பாலங்களும், புகழ்பெற்ற வைகை ஆற்றில் இருந்து வசந்தம் நகர் வரையில் 5 கி.மீ. தொலைவு வரை பூமிக்கு அடியில் சுரங்கப் பாதையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வைகை ஆற்றில் மண் பரிசோதனை

மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆர்.வி. அஸோஸியேட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மதுரை மெட்ரோ இரயில்வே திட்டத்திற்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக வைகை ஆறு உள்பட கிட்டத்தட்ட 66 இடங்களில் மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றின் கீழ் சுரங்கப் பாதையில் மெட்ரோ இரயில் செல்ல உள்ளது. இதனால் வைகை ஆற்றின் நடுவில் மண் பரிசோதனை நடைபெற்று வருகின்றது. அங்கு கிடைக்கப் பெற்ற பாறை கற்களை, ஆய்வகங்களில் வைத்து பல வகையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 100 அடி கீழ் வரை பாறைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

வைகை ஆற்றின் கீழ் சுரங்கப் பதையில் மெட்ரோ இரயில் செல்ல இருப்பதனால், மண்ணின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை வருகின்ற ஜூன் மாதத்திற்குள் முடித்து, அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், அடுத்த ஆண்டு மெட்ரோ இரயில் பணிகளைத் தொடங்கி 2027 ஆம் ஆண்டிற்குள் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!