Connect with us

ஆன்மீகம்

மதுரை சித்திரைத் திருவிழா: வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Published

on

சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த மே மாதம் 2 தேதி காலையில் வெகுவிமரிசையாக நடந்தது.

மதுரை அழகர் கோவில்

மதுரை அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே மாதம் 1 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது உலகப் புகழ்பெற்ற சிறப்பு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

வைகையில் கள்ளழகர்

நேற்று (4 ஆம் தேதி) மூன்று மாவடியில், மதுரை மக்கள் கள்ளழகரை எதிர் கொண்டு வரவேற்கும் எதிர் சேவை சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், இரவில் தல்லாகுளத்தில் இருக்கும் பெருமாள் கோவிலை அடைந்தார். விடிய விடிய கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை கள்ளழகர் சூடி, தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக் குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி அருள் பாலித்தார். இன்று காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார்.

கோவிந்தா… கோவிந்தா…

ஆழ்வார்புரம் மற்றும் வடகரை பகுதியில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பவனி வந்தார். கோவிந்தா… கோவிந்தா… என்ற கோஷத்துடன் இலட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கி வழிபட்டனர். பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். வெள்ளிக் குதிரையில் வீரராகப் பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.

காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல இலட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்தனர். இதனால் மதுரை மாநகரம் விழாக் கோலத்துடன் காட்சி அளிக்கிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!