தமிழ்நாடு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் ஆட்சியில் என்பதையும், அதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரித்தது எந்த ஆட்சியில் என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், நூறு நாட்கள் அமைதியாக நடந்த அந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் சொல்லவே இல்லை. முதல்வராக இருந்தபோதும் சரி, இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போதும் சொல்ல விரும்பவில்லை என்றார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்தனர். காவல் நிலைய மரணங்களைத் தடுப்பதில் இந்த அரசு சாதனை படைத்துள்ளது. 2019-ஆம் ஆண்டு 11 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளது. 2023-இல் இதுவரை காவல்நிலைய மரணங்கள் நிகழவில்லை. காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற அளவிற்கு இந்த அரசு சிறப்பாக செயல்படும் என முதல்வர் பேசினார்.