Connect with us

தமிழ்நாடு

பொதுமக்களை விட பரந்தூர் விமான நிலையம் அவசியமா? எதிர்க்கும் கிராம மக்கள்!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் வளத்தூர், நெல்வாய், மடப்புரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மேல்பொடவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம் மற்றும் மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

விமான நிலையம் அமைப்பதனால் ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் மற்றும் மேலேறி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய விளை நிலங்கள் மட்டுமின்றி, குடியிருப்புகளும் அகற்றப்பட்டு தங்களின் வாழ்வாதாரமும், முகவரியும் அழிக்கப்படும் என்பதனால் அப்குதியைச் சேர்ந்த பொதுமக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினந்தோறும் பகல் இரவு நேரங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக 5 கிராம சபை கூட்டங்களிலும், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இழக்கும் ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 முறை தீர்மானங்களை நிறைவேற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மொட்டை அடித்து போராட்டம்

ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தின் 264 வது நாளான நேற்று ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 100 பேர் மொட்டை அடித்து, நெற்றியில் பட்டை, நாமம் போட்டு கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கிராமத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து ஒப்பாரி வைத்து, அழுது நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். கிராம மக்களின் போராட்டம் செய்ததனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்21 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்24 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா1 நாள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்1 நாள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!