சினிமா
சினிமாவை அடுத்து ஓடிடியிலும் களமிறங்கும் சூரி!
நடிகர் சூரி தற்போது ஓடிடியிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை பார்த்திராத ஒரு சூரியை நாங்கள் இதில் பார்த்துள்ளோம் என அவரது நடிப்புக்கும் நிறைய பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்தடுத்து அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படங்களின் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதனை அடுத்து ‘மதயானை’, ‘இராவணக்கோட்டம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாறனுடன் இணைந்திருக்கிறார் சூரி.
1990களின் காலக்கட்டத்தில் மதுரை மாவட்டப் பகுதிகளில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது திரையரங்குகளில் வெளியாகும் படமாக இல்லாமல் பிரத்யேகமாக ஓடிடி வெளியீட்டிற்காகவே உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனமான ஹாட் ஸ்டாருடன் இதற்காக ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.