இந்தியா
படிப்புக்கு பணம் இல்லாமல் கார் கழுவியவர் இன்று ரூ.200 கோடி நிறுவனத்தின் தொழிலதிபர்.. உழைப்பால் உயர்ந்த நபர்..!
படிப்புக்கு பணம் இல்லாமல் காவலாளி தொழிலும் கார் கழுவும் வேலையும் பார்த்த ஒருவர் இன்று ரூபாய் 200 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று கூறினால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை.
இந்தூரை சேர்ந்த கௌரவ் என்பவர் பள்ளி படிப்பை இந்தூரில் முடித்து அதன் பின்னர் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படிப்பு படித்தார். அமெரிக்காவில் தனது தனது படிப்பை தொடர அவருக்கு பொருளாதார சிக்கலாக இருந்த நிலையில் அவர் சின்ன சின்ன வேலைகளை செய்தார். பணம் சம்பாதிப்பதாக அவர் பகுதி நேரமாக காவலாளி வேலை செய்தார். மேலும் கார் கழுவும் வேலையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடிப்பை முடித்துவிட்டு ஒரு சில நிறுவனங்களில் வேலை பார்த்த அவர் சொந்தக்கடையும் வைத்தார். அதனை அடுத்து 2015 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து அவர் இந்தியா திரும்பினார் இந்த நிலையில் தான் அவர் தீபக் பிரம்மன் என்பவரை சந்தித்தார். இந்த சந்திப்பு தான் அவரது வாழ்க்கையை திசை மாற்றியது.
சீனாவில் இருந்து பொம்மைகளை வாங்கி விற்பனை செய்யும் ஐடியாவை கெளரவ்வுக்கு தீபக் கொடுத்தார். இதனை அடுத்து அவர் 10 லட்ச ரூபாய் முதலீடு செய்து அந்த முதலீட்டில் சீனாவில் இருந்து பொம்மைகளை வாங்கி விற்பனை செய்தார் எஸ்.எம். டாய்ஸ் என்ற பிராண்டில் அவர் விற்பனை செய்த நிலையில் நாளுக்கு நாள் வியாபாரம் அதிகரித்தது. குறிப்பாக அவர் விற்பனை செய்யும் பொம்மைகளை குழந்தைகள் மிகவும் விரும்பி வாங்கியதால் அவரது வியாபாரமும் அதிகரித்தது.
இதனை அடுத்து அவர் சீனாவில் இருந்து மட்டுமின்றி இந்திய பொம்மை உற்பத்தியாளர்களிடமிருந்து பொம்மைகளை வாங்கி விற்பனை செய்தார். தற்போது அவரது நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பு செலவுக்காக அவர் கார் கழுவும் வேலை உட்பட பல வேலைகளை பார்த்த நிலையில் இன்று அவர் 200 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக இருப்பதற்கு ஒரே காரணம் அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.