Connect with us

தமிழ்நாடு

மீண்டும் தமிழ்நாட்டில் 100-ஐ கடந்த கொரோனா வைரஸ் தொற்று!

Published

on

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இன்று புதியதாக 102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 76 ஆக உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 20 பேருக்கும், சென்னை மாலட்டத்தில் 16 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தலா 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி, கரூர், கிரிஷ்ணகிரி, நாகை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் பரவல் உயர்ந்து வருகிறது. 500க்கும் கீழே பதிவாகி வந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 1,800-ஐத் தாண்டி பதிவானது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. குறிப்பாக, கேரளா மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
இந்தியா1 மணி நேரம் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா