Connect with us

இந்தியா

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

Published

on

எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, முதன்முறையாக ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, “நான் எந்தவித மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்; சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை” என ஆவேசமாக கூறினார்.

எம்.பி. பதவி பறிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என குஜராத் மாநிலம், சூரத்தில் இருக்கும் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல் காந்தியின் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் கழிந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி, இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த அடுத்த நாளே (24 ஆம் தேதி) ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பேசுபொருளாகாவும் மாறியது.

பயப்பட மாட்டேன்

பதவி பறிப்புக்கு பின்னர் முதன்முறையாக நேற்று மதியம் டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆவேசமாக, அதானி விவகாரத்தில் என்னுடைய பேச்சால் பிரதமர் மோடி பயந்து போனதால் தான், எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில், மத்திய அரசு பீதி அடைந்து, இதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகத் தான் இந்த பதவி பறிப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.

நாட்டு மக்களின் ஜனநாயக குரலைப் பாதுகாக்கவே நான் இருக்கிறேன். என்னைத் தகுதி நீக்கம் செய்வதனாலோ, மிரட்டுவதாலோ, சிறையில் அடைப்பதாலோ நான் நின்று விடுவேன் எனவும், அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு எனக் கேட்பதை நான் றிறுத்தி விடுவேன் எனவும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் நிறுத்த மாட்டேன். யாருக்கும் பயப்படவும் மாட்டேன். தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன் என ஆவேசமாக பேசினார். எனக்கு ஆதரவாக இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: செப்டம்பர் 1, 2024

பர்சனல் ஃபினான்ஸ்12 மணி நேரங்கள் ago

தினக் கூலிகளுக்கும் பென்ஷன்! பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் பற்றித் தெரியுமா?

ஜோதிடம்12 மணி நேரங்கள் ago

சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பெற்றோர்களே, காலை 5 விஷயங்களை செய்து உங்கள் குழந்தைக்கு புத்திசாலித்தனம் அளியுங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்13 மணி நேரங்கள் ago

செப்டம்பர் மாத ராசி பலன் 2024: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்!

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

அடுத்த 216 நாட்கள்: சனியின் பெயர்ச்சியால் செல்வம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

பணம் பெருகும் வழி: விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் விநாயகர் சிலை எப்படி வைக்க வேண்டும்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதுப்பிக்கும் சனி பகவான்: நவம்பரில் அதிர்ஷ்டம் மலரும் ராசிகள்!

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

துலாம் ராசி இன்றைய பலன்: சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள், திறமைகள் வெளிப்படும்!

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

தனுசு ராசி இன்றைய பலன்: செல்வம் சேரும், பாசம் பொழியுங்கள்!

உலகம்7 நாட்கள் ago

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் கைது: காரணம் என்ன தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

தமிழ்நாடு7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: மாணவர்களுக்கு நிம்மதி

தமிழ்நாடு7 நாட்கள் ago

அதிமுக-விஜய் கூட்டணி தேர்தல் நேரத்தில் முடிவு: எடப்பாடி கே. பழனிசாமி

பல்சுவை7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு நைவேத்தியங்கள்

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/08/2024)!